செய்திகள் மலேசியா
சனுசி மாட் நோர் வாக்குமூலம் வழங்க எம்.ஏ.சி.சி தலைமையகத்திற்கு வந்தடைந்தார்
கோலாலம்பூர்:
கெடா மாநில காற்பந்து சங்கத்தை உட்படுத்திய 6 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான ஊழல் தொடர்பாக கெடா மாநில மந்திரி பெசார் சனுசி மாட் நோர் வாக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்தடைந்தார்.
கெடா மாநில காற்பந்து சங்கத்தின் தலைவருமான சனூசி, காலை மணி 8.30க்கு எம்.ஏ.சி.சி அலுவலகத்தை வந்தடைந்ததாக உத்துசான் மலேசிய செய்தி வெளியிட்டுள்ளது.
வாக்குமூலம் அளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 9ஆம் தேதி, கெடா மாநில மந்திரி பெசார் ஊழல் நடவடிக்கைக்காக விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களுக்கு முறையான நிதியை வழங்கப்படாமல் இருந்ததை அடுத்து குத்தகையாளர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் எம்.ஏ.சி.சி சனூசி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.
2020ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த ஊழல் காரணமாக முதலில் கெடா மாநில காற்பந்து சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை எம்.ஏ.சி.சி கைது செய்தனர். எம்.ஏ.சி.சியின் இந்த கைது தொடர்பில் சனூசி நோர் கடுமையான சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரிசுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரியாத் சென்றடைந்தார்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm