செய்திகள் உலகம்
போதைப்பொருள் கும்பலுடன் எக்குவடோர் அரசாங்கம் போராடி வருகிறது: அதிபர் டேனியல் நோபொவ தகவல்
எக்குவடோர்:
எக்குவடோரில் போதைப்பொருள் குடும்பலுக்கும் ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 10 பேர் மரணமடைந்தனர். அதில் இரு போலீஸ் அதிகாரியாவார்கள் என்று எக்குவடோர் நாட்டின் அதிபர் டேனியல் நோபொவ கூறினார்.
எக்குவடோர் நாடு தற்போது மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. போதைப்பொருள் கும்பலைத் துடைத்தொழிப்பதே எங்களின் தலையாய பணியாகும் என்று வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அதிபர் டேனியல் நோபொவ தெரிவித்தார்.
போதைப்பொருள் கும்பல் ஒன்று எக்குவடோர் நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதாக நேரலை நிகழ்ச்சி ஒன்றில் ஆயுதமேந்தி அவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம் உலக நாடுகள் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேரலையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த கும்பலை போலீஸ் சிறப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.
அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிக்கும் காணொலிகளும் சமூக ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm