செய்திகள் மலேசியா
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
உலகமெங்கும் தைப்பூச விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவில் பத்துமலை திருத்தலத்தில் இந்த தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கும் இவ்விழா பல நாட்களுக்கு நீடிக்கும்.
தை மாதம் தொடக்கத்தில் இருந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.
இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்கான தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக பத்துமலை ஆற்றங்கரை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் இந்த ஆற்றங்கரையை முழுமையாக பயன்படுத்தலாம்.
குறிப்பாக பக்தர்கள் ஆற்றங்கரையிலும் ஆலய வளாகத்திலும் சுத்தத்தை பேண வேண்டும் என டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2024, 7:03 pm
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக கஜகஸ்தான் சென்றடைந்தார் பிரதமர்
May 16, 2024, 6:18 pm
தகவல், தொடர்பு அமைச்சின் 522 பணியாளர்கள் சிறந்த சேவைக்கான விருதை பெற்றனர்
May 16, 2024, 5:16 pm
சாலையைக் கடக்க முயன்ற புலி விபத்தில் மரணமடைந்தது
May 16, 2024, 4:52 pm
மின்னியல் சிகரேட் பயன்பாடு 600 விழுக்காடு உயர்ந்துள்ளது
May 16, 2024, 4:19 pm
நாடு முழுவதும் போதுமான இணையச் சேவை இருப்பதை அரசு உறுதி செய்யும்: ஸாஹித் ஹமிடி
May 16, 2024, 3:59 pm