
செய்திகள் மலேசியா
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
உலகமெங்கும் தைப்பூச விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவில் பத்துமலை திருத்தலத்தில் இந்த தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கும் இவ்விழா பல நாட்களுக்கு நீடிக்கும்.
தை மாதம் தொடக்கத்தில் இருந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.
இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்கான தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக பத்துமலை ஆற்றங்கரை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் இந்த ஆற்றங்கரையை முழுமையாக பயன்படுத்தலாம்.
குறிப்பாக பக்தர்கள் ஆற்றங்கரையிலும் ஆலய வளாகத்திலும் சுத்தத்தை பேண வேண்டும் என டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am