நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலானை ஆன்மிக உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

ரமலான் மாதத்தை வெறும் கடமையாக மட்டுமல்லாது, ஆன்மிக முயற்சியுடனும், தன்னடக்கத்துடனும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

ரமலான் காலத்தில் செய்யப்படும் வழிபாடுகள், தனிப்பட்ட ஆசைகளுக்கு எதிரான உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், மனதின் தூய்மையையும் வாழ்க்கை ஒழுக்கத்தையும் வளர்க்கும் நோக்கத்துடன் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நோன்பு என்பது இறைவனைப் பற்றிய பயபக்தியை உருவாக்கும் ஒரு பயிற்சி என கூறிய அவர், இதன் இறுதி இலக்கு இறைநம்பிக்கையும் நேர்மையும் ஆகும் என்றார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset