நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியா எதிர்கட்சி தலைவர் லீ ஜே ம்யுங் மருத்துவமனையிலிருந்து வெளியாகவுள்ளார் 

கோலாலம்பூர்: 

தென்கொரியா நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவர் லீ ஜே ம்யுங் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. 

DEMOCRATIC PARTY கட்சியின் முன்னணி தலைவராக விளங்கும் அவர் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். 

கடந்த வாரம் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது மர்ம நபர் ஒருவரால் கழுத்து பகுதியில் கத்துக்குத்துக்கு ஆளான லீ, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

எதிர்கட்சி தலைவருக்கு எதிரான இந்த சம்பவமானது அந்நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் இதர எதிர்கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset