நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாங்கா துபாய்; கோலாலம்பூர் போலீஸ் தரப்பு எட்டு புகார்களைப் பெற்றுள்ளது

கோலாலம்பூர்: 

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்பதற்காக லங்கா துபாய் சதித்திட்டம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோலாலம்பூர் போலீஸ் தரப்பு இது தொடர்பாக எட்டு புகார்களைப் பெற்றுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் படையின் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜீத் கூறினார். 

அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்திலும் செராஸ் மற்றும் டாங் வாங்கி ஆகிய போலீஸ் நிலையத்திலும் தத்தம் புகார்களை மேற்கொண்டனர். 

சம்பந்தப்பட்ட புகார்கள் யாவும் புக்கிட் அமான் குற்றப்புலானாய்வு துறை பிரிவினரால் விசாரிக்கப்படும் என்று அல்லாவுதீன் தெரிவித்தார். 

லங்கா துபாய் தொடர்பாக அரசியல் தலைவர்களிடையே பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் போலீஸ் புகார்களும் செய்யப்பட்டன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset