நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து அறப்பணி வாரியம் இன்னுமும் பினாங்கு மாநில அரசின்  கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர்

புத்ராஜெயா:

இந்து அறப்பணி வாரியம் இன்னமும் பினாங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ டகாங் உறுதிப்படுத்தினார்.

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும்.

பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களில் இதுவும் அடங்கும் என்று அமைச்சர் ஏரன் அறிவித்தார்.

ஆனால் மாநில அரசு இந்த நடவடிக்கை குறித்து ஒருபோதும் ஆலோசிக்கப்படாததால் தான் அதிர்ச்சியடைந்ததாக பினாங்கு முதலமைச்சர் கூறினார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பேசிய அமைச்சர்,

இந்து அறப்பணி வாரியம் இன்னமும் பினாங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

அதன் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பு தான் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுடையது.

கடந்த காலங்களில் மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவற்றின் கீழ் வாரியத்தின் ஆண்டறிக்கைகள், நிதி அறிக்கைகளை அமைச்சரவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தன.

தற்போது அந்த பொறுப்பை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஏற்றுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset