செய்திகள் மலேசியா
மாமன்னராகும் வரை எந்தவொரு கோரிக்கையையும் ஏற்க மாட்டேன்: சுல்தான் இப்ராஹிம்
இஸ்கண்டார் புத்ரி:
மாமன்னராக சத்தியப் பிரமாணம் எடுக்கும் வரை எந்தவொரு கோரிக்கையையும் ஏற்க மாட்டேன்.
ஜொகூர் மாநில ஆட்சியாளர், சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் சுல்தான் இப்ராஹிம் பார்வையாளர்களை சந்திப்பது வழக்கம்.
ஆனால் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை அவர் யாரையும் சந்திக்க மாட்டார்.
அதே வேளையில் ஜொகூர் மந்திரி புசார், மாநில அரசாங்க உறுப்பினர்கள், அதிகாரிகளுடனான சந்திப்பில் அவர் கலந்து கொள்வார்.
அதே வேளையில் முன்னர் திட்டமிட்ட நிகழ்வுகளில் மட்டும் அவர் பங்கேற்கவுள்ளார்.
இது குறித்து சுல்தான் இப்ராஹிம் கூறியதாவது,
மாமன்னராக சத்தியப்பிரமாணம் செய்யும் வரை யாரையும் நான் சந்திக்க போவது இல்லை.
அவர்களின் கோரிக்கையையும் நான் ஏற்கப் போவது இல்லை.
இந்த மகத்தான பொறுப்பு, நம்பிக்கையை மேற்கொள்வதற்கு முன், எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
தற்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி 30ஆம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm