நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாமன்சாரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சுரேஷ் வெற்றி

கோலாலம்பூர்:

டாமன்சாராவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவருக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளேன் என்று சுரேஷ் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆலயம் கட்டுவதற்காக நன்கொடை வழங்கினேன். ஆனால் ஆலயம் கட்டப்படாமலே இருந்தது.

இதுபற்றி கேள்வி எழுந்த போது ஆலயத் தலைவர், அவரின் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி என் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டது.

குறிப்பாக அவர்களை நான் மிரட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை 2020 முதல் 2023ஆம் தேதி வரை பெட்டாலிங்ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது.

தற்போது தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. குறிப்பாக அவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டது.

என் மீதான வழக்கில் வெற்றி பெற்று விட்டேன். ஆனால் நான் கொடுத்த நன்கொடை என்னவானது.

ஆலயம் எப்போது கட்டப்படும். அதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் தர வேண்டும்.

இதுவே எனது கோரிக்கை என்று சுரேஷ் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset