செய்திகள் மலேசியா
மத்திய அமைச்சரின் கீழ் இந்து அறப்பணி வாரியம்: முதலமைச்சர் சாவ் அதிர்ச்சி
ஜார்ஜ்டவுன்:
மத்திய அமைச்சரின் கீழ் இந்து அறப்பணி வாரியம் மாற்றப்பட்டது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கூறினார்.
பினாங்கு அரசாங்கம் கடந்த நூற்றாண்டாக அதன் பிரிவின் கீழ் இருந்த இந்து அறப்பணி வாரியம் இப்போது மத்திய அமைச்சகத்தின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முன்பு மாநில அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்பட்டது.
இப்போது பிரதமரால் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக அது தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இனி செயல்படும்.
இது தமக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த நடவடிக்கை குறித்து மாநில அரசிடம் ஒருபோதும் ஆலோசனை கேட்கப்படவில்லை.
மேலும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் வைக்க மத்திய அரசு எங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் பத்துகவானில் நடந்த ஒரு நிகழ்வின் போது முதலமைச்சர் கூறினார்.
சுமார் 100 ஆண்டுகளாக பினாங்கு அரசாங்கத்தின் கீழ் இந்து அறப்பணி வாரியம் இருந்து வருகிறது.
ஆனால் திடீரென்று இப்போது அது அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அமைச்சிடம் மாநில அரசு அமைச்சகத்திடம் விளக்கத்தைக் கோரும் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 3:34 pm
வினோசினி மின்சாரம் தாக்கி இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: யுயுஎம்
May 7, 2024, 3:33 pm
துன் மகாதீரை கைது செய்வது எம்ஏசிசியின் நோக்கம் அல்ல: அஸாம் பாக்கி
May 7, 2024, 3:32 pm