நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வான் போக்குவரத்துத் துறை 2024-ஆம் ஆண்டு துரித வளர்ச்சி காணும்: அந்தோணி லோக் நம்பிக்கை

சிப்பாங் :

நாட்டின் வான் போக்குவரத்து துறையை மேம்படுத்துவற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பு காட்டி வரும் நிலையில், இவ்வாண்டு வான் போக்குவரத்துத் துறை துரித வளர்ச்சி காணும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் ந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களின் அதிகரிப்பை அவர் மேற்கோள் காட்டிய அவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறிப்பாகச் சீன மற்றும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை தளர்த்துவது இந்தத் துறைக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

உள்நாட்டு பயணத் தடங்கள் மட்டுமின்றி அனைத்துலகத் தடங்களிலும்  விமானப் போக்குவரத்துத் துறையில் சிறப்பான வளர்ச்சியை இவ்வாண்டு தமது துறை எதிர்ப்பார்ப்பதையும் லோக் ஒப்புக் கொண்டார்.

இதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் காரணமாகும். குறிப்பாக சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை தளர்த்துவதும் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று சீன புத்தாண்டுக்கான ஏர் ஆசியா நிறுவனத்தின் நிலையான குறைந்த கட்டணம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனா. இந்தியா போன்ற முக்கியச் சந்தைகளிலிருந்து மட்டுமல்ல, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும்  குறிப்பிடத்தக்கப்  பயணிகளின் வருகையை மலேசியா பதிவு செய்துள்ளதை  லோக் சுட்டிக்காட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset