செய்திகள் மலேசியா
நாட்டில் வர்த்தகக் குற்றங்கள் உயர்வு
கோலாலம்பூர் :
நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தகக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 53.2 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இதனால், 1,433 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முஹம்மத் யூசுப் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றம் மற்றும் தொலைத்தொடர்பு உலகின் வளர்ச்சியின் காரணமாகப் புதிய பாணியிலான பல்வேறு மோசடி யுக்திகள் கையாளப்படுகின்றன.
இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வணிகக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் 26,330 மோசடிச் சம்பவங்களில் 6,217 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய அவர், 2020-ஆம் ஆண்டில் 2,064 கோடி வெள்ளியும் (27,323 சம்பவங்கள்), 2021-ஆம் ஆண்டு 2,206 கோடி வெள்ளியும் (31,490 சம்பவங்கள்), 2022இல் 1,733 கோடி வெள்ளியும், (30,536 சம்பவங்கள்) 2023-ஆம் ஆண்டு 211 கோடி வெள்ளியும் (40,350 சம்பவங்கள்) இழப்புகள் பதிவு செய்யப்பட்டன என்றார்.
கடந்த ஐந்து வருடங்களாகப் புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைக்குப் பெரும் சவாலாக இருப்பதை அஅவர் ஒப்புக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm