நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட்டிக்சனில் பட்டாசு வெடித்து மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு டாக்டர் வான் அஜிசா உதவி

கோலாலம்பூர்:

கடந்த திங்கட்கிழமை நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சனில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் பட்டாசு வெடித்ததில் இரண்டு உடன்பிறப்புகள் மரணமடைந்தனர்.

மரணமடைந்தவர்களின் குடும்பங்களை சந்தித்த பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா அனுதாபங்களை தெரிவித்ததுடன் நன்கொடையும் வழங்கினார்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் வான் அஜிசா, 

செராஸ், பாங்சாபூரியில் உள்ள அவர்களது வீடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நேரடியாக சந்தித்து உதவி நிதியை வழங்கினார்.

மேலும் உதவித் தொகையை தவிர்த்து
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவைப்படும் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்றார்.

குறிப்பாக அவர்களின் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை எளிதாக்குவோம் என்று டாக்டர் வான் அஜிசா செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset