நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை: முஹம்மது சனூசி நூர் அறிவிப்பு

அலோர் ஸ்டார்: 

எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் கெடா மாநிலத்தில் அன்றைய தினம் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனூசி முஹம்மது நோர் அறிவித்தார்.

கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் மாநில அரசாங்கம் இந்த சிறப்பு விடுமுறையை முன்கூட்டியே அறிவித்து விட்டது. இதனால் பக்த பெருமக்கள் தைப்பூசத் திருவிழா கொண்டாட ஏதுவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் இணக்கம் பெறப்பட்டதாகவும் அவர் சொன்னார். 

மலேசியாவில் தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழா ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset