செய்திகள் மலேசியா
தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை: முஹம்மது சனூசி நூர் அறிவிப்பு
அலோர் ஸ்டார்:
எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் கெடா மாநிலத்தில் அன்றைய தினம் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனூசி முஹம்மது நோர் அறிவித்தார்.
கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் மாநில அரசாங்கம் இந்த சிறப்பு விடுமுறையை முன்கூட்டியே அறிவித்து விட்டது. இதனால் பக்த பெருமக்கள் தைப்பூசத் திருவிழா கொண்டாட ஏதுவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் இணக்கம் பெறப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
மலேசியாவில் தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழா ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm