செய்திகள் மலேசியா
தலைநகரில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணி 1 மில்லியன் பேர் திரள்வார்: சேகு முஹம்மத் அஸ்மி
கோலாலம்பூர்:
தலைநகரில் நடைபெறவுள்ள பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் 1 மில்லியன் பேர் திரள்வார்கள்.
இதனை மலேசிய இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை வாரியத்தின் தலைவர் சேகு முஹம்மத் அஸ்மி அப்துல் ஹமீத் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பாலஸ்தீனத்தில் பேரழிவுகள் நடந்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்து வருகின்றனர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என மலேசியர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலைநகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளது.
இந்த பேரணி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காசாவில் போரை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 1,000 அரசு சாரா இயக்கங்களில் பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.
ஆக மொத்தத்தில் 1 மில்லியன் மலேசியர்கள் இப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
குறிப்பாக இப்பேரணி தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் செல்லும் என்று சேகு முஹம்மத் அஸ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm