செய்திகள் மலேசியா
கார் வாங்கி எட்டு மணி நேரத்தில் பழுதடைந்தது; இந்திய இளம் பெண் ஆதங்கம்
கோலாலம்பூர்:
பெரோடுவா பெஸ்ஸா ரக காரை வாங்கிய ஓர் இந்திய இளம்பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரை வாங்கி எட்டு மணி நேரத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கார் பழுதடைந்தது. இந்த சம்பவத்தை அடுத்து நாகக்கன்னி சுப்ரமணியம் எனும் அப்பெண் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கார் பழுதடைந்த நிலையிலும் கார் விற்பனையாளர்களிடமிருந்து உரிய பதில்கள் எதுவும் இதுவரை இல்லை. இருப்பினும், நாகக்கன்னி சுப்ரமணியம் மாதந்தோறும் 570 ரிங்கிட் பணத்தை செலுத்தி வந்தார் என்று அவர் குறிப்பிட்டார்.
காரை பரிசோதித்ததில் காரின் எஞ்ஜின் பழுதடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட எஞ்ஜினில் சர்க்கரை உள்ளதால் தான் காரின் எஞ்ஜின் பழுதடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாம் எந்தவொரு உணவோ சர்க்கரையோ எடுத்து வரவில்லை, இருந்தும் புதிதாக வாங்கிய கார் எப்படி பழுதாகி இருக்கும் என்று தமக்கு தெரியவில்லை என்று வருத்ததுடன் குறிப்பிட்டார்.
புதிய கார் மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கார் விற்பனையாளர் தெரிவித்தார். ஆனாலும் இந்த பரிந்துரையை நாகக்கன்னி சுப்ரமணியம் ஏற்க மறுத்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm