நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் பணிக்கு திரும்பி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்திய பாதுகாவலர் கிட்டு மாமா

தஞ்சோங் ரம்புத்தான்:

மீண்டும் பணிக்கு திரும்பி பாதுகாவலர் கிட்டு மாமா மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார்.

பேரா தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பண்டார் பாரு புத்ரா ஆரம்பப் பள்ளியில் கே. கிட்டு பாதுகாவலராக பணியாற்றினார்.

கடந்தாண்டு அவர் பணி ஓய்வு பெற்றார். இதனால் அவருக்கு பிரியாவிடை நிகழ்வு நடத்தப்பட்டது.

அப்போது மாணவர்கள் அவரை கட்டியணைத்தும் பரிசுகள் வழங்கியும் அவரை வழியனுப்பினர்.

மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதால் அவருக்கு வழங்கப்பட்ட இப்பிரியாவிடை சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இந்நிலையில் நீண்ட விடுமுறைக்கு பின் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு திரும்பினர்.

அப்போது பாதுகாவலர் கிட்டு மாணவர்களை நுழைவாயலில் வரவேற்றார்.

அவரை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியடைந்தனர்.

கிட்டு மாமா என்று அன்புடன் அழைக்கப்படும் கிட்டு, இந்த ஆண்டு இறுதி வரை பள்ளியுடன் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க முன்மொழியப்பட்டதாக கூறினார்.

ஜனவரி 1 அன்று பள்ளியிலிருந்து அழைப்பைப் பெற்ற பிறகு திரும்பி வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.

இதனிடையே கிட்டுவின் பிரியாவிடை காணொளியை சமூக வலைத் தளங்களில் 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அதே வேளையில் 2 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset