நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் கதவை வேகமாக மூடிய மனைவிக்கு அடி உதை: அம்பாங்கில் சம்பவம்

அம்பாங் ஜெயா:

வீட்டுக் கதவை வேகமாக மூடிய மனைவியை கணவரால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தாமான் மாஜூ ஜெயாவில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமத் அசாம் இஸ்மாயில் கூறினார்.

சம்பவத்தின் போது 40 வயடைய அம்மாது  வீட்டின் கதவை வேகமாக மூடியுள்ளார்.

இதனால் 45 வயதுடைய கணவருக்கும் அவருக்கு இடையே ​​தவறான புரிதல் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவ்வாடவர் அம்மாதுவை  தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான மாதுவின் வலது கை, வலது நடு விரல், வலது கால் ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை சிகிச்சைக்கு பின் பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆடவரை போலீசார் கைது செய்தனர் என்று முகமத் அசாம் இஸ்மாயில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset