நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தான், திரெங்கானுவில் வெள்ளம் மோசமடைந்துள்ளது 

கோத்தா பாரு: 

நாட்டின் கிழக்கு கரை மாநிலங்களான கிளாந்தான், திரெங்கானுவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.

நேற்றிரவு 11,329 ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலையில் 12,645ஆக பதிவு செய்யப்பட்டதாக மாநில பேரிடர் நிர்வகிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

கிளாந்தான் மாநிலத்தில் குறிப்பாக பாசீர் மாஸ் பகுதியில் வெள்ளத்தால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7210 பேர் தற்போது தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் மேலும் கூறினர். 

திரெங்கானு மாநிலத்திலும் தொடர் கனமழையால் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset