நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியர்களை ஊக்குவிக்க வேண்டும்: செல்வராஜ்

பெட்டாலிங்ஜெயா:

வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியர்களை தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

இது அவர்கள் மேலும் சாதிக்க உறுதுணையாக இருக்கும் என்று ராஜ் வணிக நெட்வொர்க்கின் பொறுப்பாளர் செல்வராஜ் ஆசீர்வாதம் கூறினார்.

ராஜ் வணிக நெட்வொர்க்கின் ஏற்பாட்டில் விருதளிப்பு விழா அண்மையில் பெட்டாலிங் ஜெயா பிஏசி கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 35 இளம் தொழில்முனைவர்களுக்கு இந்நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டது.

அச்சகத் தொழில், பலகாரங்கள் தயாரிப்பாளர்கள், நகை வியபாரம், சுத்தம் செய்யும் நிறுவனம் நடத்துநர், கேட்டரிங் தொழில், வீடியோ புகைப்பட கிராபிக் தொழில் செய்பவர்கள், வாகன, கணினி விற்பனையாளர்கள் உட்பட பல தரப்பட்ட வர்த்தகங்களில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

வர்த்தகத்தி சாதிப்பவர்களுக்கு விருது வழங்குவது இவ்விழாவின் முக்கிய நோக்கமாக இருந்தாலும்,

வர்தக்கர்களிடையே தொடர்பு ஏற்படுத்துவது மற்றொரு நோக்கமாகவும் உள்ளது.

அதே வேளையில் இந்தியர்கள் வர்த்தகத்தில் சாதிக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு உரிய ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும் என்று செல்வராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset