நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்: சிவராசா

கோலாலம்பூர்:

அந்நிய தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் எம்ஏசிசி முழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுங்கைபூலோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா இதனை வலியுறுத்தினார்.

வங்காளதேசத்தைச் சேர்ந்த 171 தொழிலாளர்கள் முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் சாலையில் கூட்டமாக நடந்து வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

தற்போது அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய முகவர் நிறுவனத்திடம் எம்ஏசிசி முழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

வேலைக்காக நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளனர்.

இது சட்டப்படி குற்றமாகும். ஆகவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset