செய்திகள் மலேசியா
4 மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 18,735 பேர் பாதிப்பு
கோலாலம்பூர்:
நான்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரில் இதுவரை 18,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழையைத் தொடர்ந்து நாட்டின் நான்கு மாநிலங்களில் வெள்ளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு மாநிலங்களிலும் 199 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில் 18,735 பேர் தங்கியுள்ளனர்.
கிளந்தான் மாநிலத்தில் ஆக அதிகமாக 11,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3,444 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் 72 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
திரெங்கானுவில் 6,724 பே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,791 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் 110 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பகாங் மாநிலத்தில் 187 குடும்பத்தைச் சேர்ந்த 791 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் கோல லங்காட் மாவட்டத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரியாத் சென்றடைந்தார்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm