செய்திகள் மலேசியா
பினாங்கில் 120,000 குடும்பங்கள் தண்ணீரை சேமிக்க உத்தரவு
ஜார்ஜ்டவுன்:
பினாங்கில் 120,000 குடும்பங்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு பினாங்கு நீர் சேவை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பினாங்கு தென்மேற்கு மாவட்டத்தின் மிகப் பெரிய குழாய் ஒன்று உடைந்துள்ளது.
இந்த குழாயை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கப்பட்டு நேற்று இரவுக்குள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
ஆனால் சாதகமற்ற வானிலை, உயர் அலைகள் காரணமாக இப்பணிகள் தாமதமாகின.
மேலும் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைத்த குழாய் முழுமையாக சீரமைக்க வேண்டும்.
ஆகவே, தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள 120,000 குடும்பங்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அவர்கள் தண்ணீரை சேமித்துக் கொள்ள வேண்டும் என்று வாரியத்தின் தலைமை இயக்குநர் கே. பத்மநாதன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2024, 6:03 pm
பிராந்திய, உலகளாவிய அறைகூவல்களை மலேசியா இலகுவாக எடுத்துக்கொள்ளாது: பிரதமர் அன்வார்
October 7, 2024, 5:56 pm
ஏழு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு மையம்
October 7, 2024, 5:45 pm
செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டப்படுவதை மடானி அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
October 7, 2024, 5:14 pm
நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கு விசாரணை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
October 7, 2024, 4:21 pm
பேரா மாநில மஇகா பொறுப்பாளர் பட்டியல் இவ்வாரம் வெளியிடப்படும்: டான்ஸ்ரீ ராமசாமி
October 7, 2024, 4:20 pm
உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில் மலேசியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது: செனட்டர் சரஸ்வதி
October 7, 2024, 4:10 pm
ஜொகூரில் வாரயிறுதி விடுமுறை மாற்றம் 2.5 மில்லியன் மக்களை பாதிக்கும்: டத்தோ ஓன் ஹபிஸ் காசி
October 7, 2024, 3:43 pm