செய்திகள் மலேசியா
பூஜை மணி சத்தத்தால் அண்டை வீட்டார் இடையே சண்டை: போலீஸில் புகார் செய்யப்பட்டது
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் பூஜை மணி சத்தத்தால் அண்டை வீட்டார் இடையே சண்டை ஏற்பட்டது. பூஜையின் போது ஒலிக்கப்பட்ட சத்தம் தமது தூக்கத்தைக் கலைத்ததாக எதிர்வீட்டில் இருந்த மலாய்க்காரர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவமானது இம்மாதம் எட்டாம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நிகழ்ந்ததாக ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் கூறினார்.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக நேற்றுதான் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
அக் காணொலியில், சம்பந்தப்பட்ட மலாய் ஆடவர் கடும் சினம் கொண்டு ஓர் இந்திய மாதுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am