நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் ஊராட்சி மன்ற தேர்தல்; வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்படும்

கோலாலம்பூர்: 

கோலாலம்பூரில் ஊராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானம் குறித்து வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங்கைச் சந்தித்து கலந்தாலோசிக்கப்படும் என்று கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தஃபா கூறினார். 

ஊராட்சி மன்ற தேர்தல்களின் முக்கியத்துவம் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும் இதனை தமது அமைச்சு மறுக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார். 

கோலாலம்பூரில் ஊராட்சி மன்ற தேர்தல் குறித்து இரு அமைச்சுகளும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று டாக்டர் ஸலேஹா முஸ்தஃபா தெரிவித்தார். 

முன்னதாக, கோலாலம்பூரில் ஊராட்சி மன்ற தேர்தலை நடத்த புத்ராஜெயா தயாராக இருக்க வேண்டும் என்று கோலாலம்பூர் DAP கட்சி தலைவர் டான் கோக் வாய் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset