நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தற்காப்பு அமைச்சராக தமது பணியைத் தொடங்கினார் டத்தோஶ்ரீ காலிட் நோர்டின்

கோலாலம்பூர்: 

நாட்டின் புதிய தற்காப்பு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் டத்தோஶ்ரீ காலிட் நோர்டின் தமது பணியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். 

டத்தாரான் விஸ்மா பெர்த்தாஹானான் இடத்திற்கு வந்த அவரை தற்காப்பு அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ இஷாம் இஷாக் மற்றும் அரச மலேசிய ராணுவ படையின் தளபதி தான்ஶ்ரீ முஹம்மத் அப்துல் ரஹ்மான் ஆகியோர் வரவேற்றனர். 

அரச மலேசிய மலாய் ரெஜிமன் படையின் மரியாதை அணிவகுப்பைப் பெற்றுக்கொண்ட அவர் மரியாதை அணிவகுப்பிலும் கலந்துகொண்டார். 

உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த கோத்தா தம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ காலிட் நோர்டின் தற்போது தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset