நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனைகளில் சேவையில் கவனம் செலுத்துங்கள்; ஆடையில் அல்ல: சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர்:

மருத்துவமனைகளில் சிறந்த சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மாறாக பொது மக்கள் அணியும் ஆடையில் அல்ல என்று சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மர் கூறினார்.

பினாங்கு செபராங் ஜெயா மருத்துவமனையில் ஷார்ட்ஸ் அணிந்ததற்காக நோயாளி ஒருவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், மருத்துவமனைகளில் சேவைக்குதான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.

சுங்கைப்பட்டாணியில் உள்ள அந்த மருத்துவமனையில் 5 மணி நேரம் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது.

நோயாளிகளில் ஆடையில் கவனம் செலுத்துவதைவிட அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset