நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 மீண்டும் அதிகரிக்கிறது; முகக் கவசம் அணிய துவங்குங்கள்: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக் கவசத்தை அணிவதை தொடர்ந்து கடைப் பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மத் கூறினார்.

கடந்த ஒரு வாரக் காலத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000ஆக அதிகரித்துள்ளது.

இந்த தொற்று அதிகரிப்பை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அதே வேளையில்  பொதுமக்கள் முகக் கவசத்தை அணிவதை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். 

குறிப்பாக 3எஸ் எனப்படும் நெரிசலான இடம், குறுகிய பகுதி, மிக அருகில் பேசுவதை மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பள்ளி விடுமுறை, பொது விடுமுறை காலங்களில் மக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

அதனால் பொதுமக்கள தொடர்ந்து முகக் கவசத்தை அணிய வலியுறுத்தப்படுகின்றனர்.

அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset