நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவா வெள்ளத்தை எதிர்கொள்ள 1,262 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

கூச்சிங்:

சரவா வெள்ளத்தை எதிர்கொள்ள 1,262 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்  என்ற சரவா போலீஸ் தலைவர் டத்தோ மான்சா ஹதா கூறினார்.

வடகிழக்குப் பருவமழை நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் மழையால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க 1,262 போலீஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் 187 பேர் உயர் அதிகாரிகள், 1,075 கீழ் நிலை அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

அதே வேளையில் ஜேபிபிஎம், தீயணைப்பு படை உட்பட இதர அரசு துறைகளும் இந்த வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset