செய்திகள் மலேசியா
பேராக்கில் இன்னும் 1 மலேசியா கிளினிக்குகள் இயங்கி வருகின்றன: சிவநேசன்
ஈப்போ :
பேராக்கில் 1 மலேசியா கிளினிக்குகள் மூடப்படவில்லை. அந்த 18 கிளினிக்குகளும் இயங்கி வருகின்றன.
மாறாக, 1 மலேசியா கிளினிக்குகள் சமூக கிளினிக்குகள் என பெயர் மாற்றம் கண்டு இன்றும் இயங்கி வருகின்றன.
காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாக மனித வளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் கூறினார்.
மேலும், காயங்களுக்கு மருந்திடுவது, தையல்களைப் பிரிப்பது,நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற நிலையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நோய்களுக்கான பின்தொடர்தல் சிகிச்சை போன்ற மிதமான சிகிச்சை முறைகள், அத்துடன் சுகாதார ஆலோசனைகளும் இங்கு வழங்குப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பேராக்கில் 1மலேசியா கிளினிக் மூடப்பட்டதாக அல்லது செயல்படாமல் இருக்கின்றதா என்பதை அறிய விரும்பும் டாக்டர் ஹாஷிம் புஜாங் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பிய கேள்விக்குச் சிவநேசன் இவ்வாறு பதிலளித்தார்.
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் மூன்று சமூக கிளினிக்கள் இருப்பதையும் சிவநேசன் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am