நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்க்கட்சியின் அரசியல் சூழ்ச்சியால் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கிடைக்கவில்லை: பிரதமர் அன்வார்

பெட்டாலிங் ஜெயா:

ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு பெரிதாகக் கிடைக்க பெறவில்லை என்பதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார்.

மலாய்க்காரர்களின் நலன், மதம் போன்ற காரணங்களை முன்னிறுத்தி மோசமான அரசியல் சூழ்ச்சி செய்யும் எதிர்க்கட்சியின் செயலால்தான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அரசாங்கம் மலாய்க்காரர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது என்ற பிம்பத்தை உருவாக்கிய எதிர்க்கட்சியினரின் அரசியல் சூழ்ச்சிதான் இந்த நிலைமைக்கு காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், கெமாமான் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதால் ஒற்றுமை அரசாங்கத்தின் அரசியல் வலுவிழந்து விட்டது என்ற கூற்றையும் அன்வார் மறுத்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset