செய்திகள் உலகம்
வேகமாக உருகும் இமயமலை: உதவ ஐ.நா. வலியுறுத்தல்
துபாய்:
புவி வெப்பமயமாத காரணத்தால் இமய மலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன என்றும் இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவ வேண்டியது
அவசியம் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினார்.
துபாயில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், பனிப்பாறைகள் உருகும் பிரச்னைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இமயமலையில் இருந்து உருவாகும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 10 முக்கிய நதிகளை நம்பி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.
நேபாளத்தில் உள்ள பனி மூடிய மலைகள் கடந்த 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு பனியை இழந்துள்ளன. பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் மாசுபட்டால், புவி வெப்பமடைந்து வருவதன் நேரடி தாக்கத்தால் இது நிகழ்ந்துள்ளது.
இமயமலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருவதால் பேரழிவு ஏற்படக் கூடும்.
பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வளர்ந்த நாடுகளால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிதியை வழங்க வேண்டும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
