செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
ஜொகூர் பாரு:
நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாதம் படிவம் 5 பயிலும் மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வினை எழுதவிருக்கின்றனர்.
மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க கல்வியமைச்சு பல முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வேளை வெள்ள நிலைமை மோசமடைந்தால் தேர்வு எழுதும் மையயங்களை மாற்றுவதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வெள்ளம் காரணமாக நியமிக்கப்பட்ட தேர்வு எழுதும் மையத்திற்கு மாணவர்கள் செல்ல இயலாவிடின், உடனடியாக பள்ளி அல்லது மாநிலக் கல்வித் துறைக்குத் தெரிவிக்குமாறு ஃபட்லினா கேட்டுக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 10:52 am
40 மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது
September 16, 2026, 10:48 am
மொஹைதின் மீதான 4 குற்றச்சாட்டுகளைக் கைவிட்ட முடிவு குறித்து சட்டத்துறை தலைவர் விளக்கமளிக்க வேண்டும்: கோபிந்த் சிங்
September 16, 2026, 10:39 am
இஸ்ரேலுக்கான இராணுவ சரக்குகளுக்கு மலேசியா ஒரு இடைவழிப் பாதையாக இருக்காது: பிரதமர்
September 16, 2026, 10:27 am
ஷீலா கொலை செய்யப்பட்ட வழக்கு: சந்தேக நபர் குழந்தையை அண்டை வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்
September 16, 2026, 10:23 am
திடீரென அதிகரிக்கும் நெருங்கிய துணைவர் கொலைகளுக்கான முக்கிய காரணங்களில் பொறாமையும் ஒன்றாகும்
September 16, 2026, 10:19 am
அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்கள்: குணராஜ்
September 16, 2026, 10:14 am
டத்தோ காந்தன் மறைவு நாட்டுக்கும் கட்சிக்கும் பேரிழப்பு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
September 16, 2026, 1:03 am
