செய்திகள் இந்தியா
இந்தியாவில் சிம் கார்டு வாங்க புதிய விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
புது டெல்லி:
இந்தியாவில் செல்போன்களுக்கு சிம் கார்டுகளை வாங்குவதற்கான புதிய விதிகள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. KYC விவரங்களை வாடிக்கையாளர்கள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பழைய சிம் கார்டுகளை மாற்ற புதிய கார்டு வாங்கினாலும் இந்த நடைமுறை பொருந்தும். அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகளில் இருந்து பணத்தை பறிக்கும் மோசடியாளர்கள் செல்போன்கள் மூலம் மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களின் கைகளில் சிம் கார்டுகள் செல்லாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு கைப்பேசி எண் கைவிடப்பட்டால், அதே எண் 90 நாள்களுக்குப் பிறகுதான் மற்றொரு நபருக்கு வழங்கப்படும்.
ஒருவர் ஒரு அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி 9 சிம் கார்டுகளை வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
