செய்திகள் மலேசியா
கல்வியாளர் நாராயணசாமிக்கு எல்எல்ஜி தன்முனைப்பு விருது: திரவியம்
கோலாலம்பூர்:
நாட்டில் புகழ் பெற்ற கல்வியாளர் நாராயணசாமிக்கு எல்எல்ஜி தன்முனைப்பு விருது வழங்கப்படவுள்ளது.
இதனை தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரவியம் மருதை தெரிவித்தார்.
மறைந்த லிம் லியன் கியோங் கல்வி, மொழி வளர்ச்சிக்கு பெருமளவில் பாடுப்பட்டுள்ளார்.
குறிப்பாக தாய் மொழியை பாதுக்காக்க போராடிய அவரின் குடியுரிமை கூட பறிக்கப்பட்டுள்ளது.
மறைந்து மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவரின் பெயரில் கலாச்சார மேம்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையம் மொழி வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு லிம் லியன் கியோங் தன்முனைப்பு விருதை வழங்கி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே சீன சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விருதை வென்றனர்.
ஆனால் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ் அறவாரியத்திற்கு அவ்விருது வழங்கப்பட்டது.
தற்போது தமிழ் அறவாரியத்தின் பரிந்துரையின் கீழ் கல்வியாளர் நாராயணசாமிக்கு அவ்விருது வழங்கப்படவுள்ளது.
தமிழ் மொழி, கல்வியின் மேம்பாட்டிற்கு அவர் ஆற்றியுள்ள சேவைக்கு இந்த விருது ஒரு அங்கீரமாக அமையும் என்று திரவியம் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 6:38 pm
ஈப்போ ஜாலான் துன் ரசாக் மேம்பால நிர்மாணிப்பு பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
November 8, 2025, 4:28 pm
அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:42 pm
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:41 pm
கிள்ளான் புக்கிட் திங்கி பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: இந்திய ஆடவர் மரணம்
November 8, 2025, 12:06 pm
கோவிட்-19 காலத்தில் உணவுக் கூடைகள் தான் கொடுக்க முடியும்; வேறு என்ன கொடுப்பது?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
November 8, 2025, 11:48 am
