நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் பிப்ரவரி 10-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ‘ஆப் இ-சிகரெட்’ நடவடிக்கையின் போது, 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மின்னணு புகைப்பிடி கருவிகள், திரவங்கள், உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 154 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதில், 141 வளாகங்கள் சட்டமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் செயல் இயக்குநர், டத்தோ ஃபிசோல் சாலே தெரிவிப்பதன்படி, 958.85 லிட்டர் மின்னணு புகைப்பிடி திரவங்கள், 83,289 கருவிகள், பல்வேறு துணை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், 2,140 அதிகாரிகளும், பணியாளர்களும் ஈடுபட்ட இந்தச் சோதனையில், 181 நபர்கள் விசாரணை செய்யப்பட்டு, சட்டவிரோத வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

மின்னணு புகைப்பிடி பயன்பாடு, மாணவர்களிடையே அதிகரிப்பது கடும் கவலைக்குரியது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset