செய்திகள் மலேசியா
பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை
ஷா ஆலாம்:
மலேசியாவில் சீனப் புத்தாண்டு, ரமலான் பண்டிகைக் காலத்தில், காசநோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக நிகழ்வுகள், காற்றோட்டம் குறைந்த இடங்களில் மக்கள் கூடுவதால், காற்றின் மூலம் பரவும் இந்த நோய் வேகமாகப் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலன் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அஸ்ருல் முகமது கலிப் கூறுகையில், காசநோயாளிகள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து, பணியிடங்கள், தங்குமிடங்கள், வழிபாட்டுத் தலங்களில் அதிகமாகப் பரவும் அபாயம் உள்ளது என்றார்.
ஒரே ஒருவர் அறியாமலேயே பலருக்கு தொற்றை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
எனவே, நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதியவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் காசநோய் ஆபத்தை மிகக் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நீண்டகால இருமல், இரத்தம் கலந்து இருமல், குறுகிய காலத்தில் அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 2:13 am
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 16, 2026, 4:44 pm
ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு
February 16, 2026, 4:40 pm
ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்
February 16, 2026, 1:56 pm
மக்களின் உணர்வுகளை டத்தோஸ்ரீ அன்வார் குறைத்து மதிப்பிடக் கூடாது: ரபிசி
February 16, 2026, 1:11 pm
பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்
February 16, 2026, 12:36 pm
மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்
February 16, 2026, 11:54 am
அவசர மருத்துவ அழைப்பில் தவறான இடத்தின் தகவல்: ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம்
February 16, 2026, 11:51 am
