நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டத்திற்கு இடையில் பாலஸ்தீன கொடியுடன் புகுந்த ரசிகர்

அகமதாபாத்: 

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. 

முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த நிலையில் ஆடுகளத்துக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.

அந்த நபர் அணிந்திருந்த மேலாடையில் ‘Free Palestine’ என்றும் ‘Stop - Bombing Palestine’ என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. அதோடு தனது பாலஸ்தீன கொடியை தனது முகக் கவசமாகவும் அவர் அணிந்திருந்தார். 

ஸாம்பா வீசிய 14-வது ஓவரின் போது அந்த நபர் களத்துக்குள் நுழைந்தார். அப்போது கோலி மற்றும் ராகுல் பேட் செய்தனர். அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைது செய்து வெளியேற்றினர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset