
செய்திகள் மலேசியா
மக்கள் சேவையில் தெலுங்கு அறக்கட்டளையின் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
கோலாலம்பூர்:
வசதியற்ற குழந்தைகள், மாணவர்களுக்காக தீபாவளிக் கொண்டாட்டத்தில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் நேர்மறையான தாக்கத்தையும் பங்களிப்புகளைப் பற்றியும் கேட்பது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.
கோலாலம்பூர் டாமான்சாரா காமன்வெல்த் கிளப்பில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செலாயாங் சுவீட் கேர் இல்லத்தை சேர்ந்த 16 குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாகத் திட்டமிட்டதற்காக மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் தலைவர் டத்தோ ஆர். காந்த ராவ் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழாவை இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடுவது நிகழ்வுக்கு முக்கியத்துவம் சேர்க்கிறது.
மேலும் சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பைக் காண்பது அற்புதமாக இருக்கிறது.
ஒரு பள்ளி மாணவிக்கும் நிதி ஊக்குவிப்பு வழங்கப்பட்டதை பெரிதும் வரவேற்கிறேன்.
மலேசிய தெலுங்கு அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளாக பின்தங்கிய மக்களுக்கு நீண்டகாலமாக அர்ப்பணிப்பு உணர்வுடன்
உதவி வருகிறது என்பது உண்மையிலேயே வரவேற்கக்கூடியது.
கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனம் பாராமல் அறக்கட்டளை மூலம் பேருதவிகளை புரிந்துள்ளது.
இந்த வேளையில் தலைவர் டத்தோ ஆர் காந்தா ராவ் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவிற்குப் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய தெலுங்கு அறக்கட்டளை தொடர்ந்து சமூகத்திற்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட நான் மேலும் ஊக்குவிக்கிறேன்.
இது போன்ற முயற்சிகள் மூலம் உண்மையிலேயே ஆதரவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கும்.
மக்களுக்கு சேவை செய்வதில் அறக்கட்டளையின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது,
மேலும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதில் உங்களுடன் இணைகிறேன் என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 8:06 pm
விபத்தில் மரணமடைந்த மாணவி நிமலா சங்கரி குழும்பத்தாருக்கு யூனிமேப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது
September 17, 2025, 7:02 pm
முஸ்லிம் அல்லாத கட்சிகளால் பாஸ் எளிதில் குழப்பமடையக் கூடாது: டத்தோஸ்ரீ ரமணன்
September 17, 2025, 6:34 pm
ஷாரா அழுததுடன் திருடியதை மறுத்தார்; கடவுள் மீது சத்தியம் செய்தார்: சாட்சி
September 17, 2025, 6:32 pm
எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும்: நிக் நஸ்மி
September 17, 2025, 6:31 pm
112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை: துன் மகாதீர்
September 17, 2025, 6:29 pm
பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே காரணம்: மார்சுக்கி
September 17, 2025, 6:28 pm
ரபிசியின் மகனைத் தாக்கியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை; சிசிடிவி தெளிவாக இல்லை: ஐஜிபி
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:24 pm