செய்திகள் உலகம்
கடும் அதிருப்தியில் சிங்கப்பூர் பேருந்து பயணிகள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சில பேருந்துச் சேவைகளை ரத்துச் செய்யவும் மாற்றியமைக்கவும் நிலப் போக்குவரத்து ஆணையம் செய்திருக்கும் முடிவைப் பயணிகள் கடுமையாக குறை கூறியிருக்கின்றனர்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்சேவை தொடங்கிய பிறகு 167 பேருந்துச் சேவையை ரத்துச் செய்யப் போவதாகப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
162 , 162M ஆகிய இரண்டு எண்கள் ஒரே சேவையாகச் செயல்படும்.
சேவை எண் 75 இனிமேல் ஊட்ரம் பார்க் ரயில் நிலையம் (Outram Park MRT), ஷென்டன் வேய் (Shenton Way), மரீனா சென்டர் (Marina Centre) ஆகிய இடங்களுக்குப் போகாது.
சேவை எண் 167 செம்பவாங், அப்பர் தாம்சன், நொவீனா, ஆர்ச்சர்ட், மத்திய வர்த்தக வட்டாரம், புக்கிட் மேரா என்று ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
அது அடுத்த மாதம் 10ஆம் தேதியோடு நிறுத்தப்படும்.
சேவை எண் 167, 162, 75 ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்துவது 30 முதல் 40 விழுக்காடு குறைந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறுவதைப் பயணிகள் சிலர் மறுத்தனர்; ஆணையத்தின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am