செய்திகள் உலகம்
கடும் அதிருப்தியில் சிங்கப்பூர் பேருந்து பயணிகள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சில பேருந்துச் சேவைகளை ரத்துச் செய்யவும் மாற்றியமைக்கவும் நிலப் போக்குவரத்து ஆணையம் செய்திருக்கும் முடிவைப் பயணிகள் கடுமையாக குறை கூறியிருக்கின்றனர்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்சேவை தொடங்கிய பிறகு 167 பேருந்துச் சேவையை ரத்துச் செய்யப் போவதாகப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
162 , 162M ஆகிய இரண்டு எண்கள் ஒரே சேவையாகச் செயல்படும்.
சேவை எண் 75 இனிமேல் ஊட்ரம் பார்க் ரயில் நிலையம் (Outram Park MRT), ஷென்டன் வேய் (Shenton Way), மரீனா சென்டர் (Marina Centre) ஆகிய இடங்களுக்குப் போகாது.
சேவை எண் 167 செம்பவாங், அப்பர் தாம்சன், நொவீனா, ஆர்ச்சர்ட், மத்திய வர்த்தக வட்டாரம், புக்கிட் மேரா என்று ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
அது அடுத்த மாதம் 10ஆம் தேதியோடு நிறுத்தப்படும்.
சேவை எண் 167, 162, 75 ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்துவது 30 முதல் 40 விழுக்காடு குறைந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறுவதைப் பயணிகள் சிலர் மறுத்தனர்; ஆணையத்தின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
