
செய்திகள் உலகம்
கடும் அதிருப்தியில் சிங்கப்பூர் பேருந்து பயணிகள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சில பேருந்துச் சேவைகளை ரத்துச் செய்யவும் மாற்றியமைக்கவும் நிலப் போக்குவரத்து ஆணையம் செய்திருக்கும் முடிவைப் பயணிகள் கடுமையாக குறை கூறியிருக்கின்றனர்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்சேவை தொடங்கிய பிறகு 167 பேருந்துச் சேவையை ரத்துச் செய்யப் போவதாகப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
162 , 162M ஆகிய இரண்டு எண்கள் ஒரே சேவையாகச் செயல்படும்.
சேவை எண் 75 இனிமேல் ஊட்ரம் பார்க் ரயில் நிலையம் (Outram Park MRT), ஷென்டன் வேய் (Shenton Way), மரீனா சென்டர் (Marina Centre) ஆகிய இடங்களுக்குப் போகாது.
சேவை எண் 167 செம்பவாங், அப்பர் தாம்சன், நொவீனா, ஆர்ச்சர்ட், மத்திய வர்த்தக வட்டாரம், புக்கிட் மேரா என்று ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
அது அடுத்த மாதம் 10ஆம் தேதியோடு நிறுத்தப்படும்.
சேவை எண் 167, 162, 75 ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்துவது 30 முதல் 40 விழுக்காடு குறைந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறுவதைப் பயணிகள் சிலர் மறுத்தனர்; ஆணையத்தின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm