செய்திகள் உலகம்
வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது
டாக்கா :
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது.
கடந்த 14-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்று, வங்காளதேசத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல், சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் கரையைக் கடக்கத் தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காளதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்த போது பலத்த காற்று வீசியதுடன் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்காளதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
இந்திய நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
