செய்திகள் உலகம்
வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது
டாக்கா :
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது.
கடந்த 14-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்று, வங்காளதேசத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல், சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் கரையைக் கடக்கத் தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காளதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்த போது பலத்த காற்று வீசியதுடன் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்காளதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 11, 2026, 8:50 pm
மலேசிய எல்லை அருகே தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
January 9, 2026, 6:34 pm
சிங்கப்பூரில் Nestle NAN பால் மாவுக்குத் தடை
January 9, 2026, 6:28 pm
இரண்டு நாள்களில் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய 2 துப்பாக்கிச்சூடுகள்
January 8, 2026, 12:49 pm
பயணியா? விமானப் பணிப்பெண்ணா?: விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்
January 8, 2026, 11:55 am
ஈரானில் பொருளாதார நெருக்கடி : 111 நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டம்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
