நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேவாலய ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு: பலி 3 ஆக உயர்வு

கொச்சி:

கேரள மாநிலம், கொச்சி அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே 2 பெண்கள் இறந்த நிலையில், லிபினா என்ற 12 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கூடியிருந்த நிலையில், அங்கு அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன.

கேரளம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் அந்த ஜெபக் கூட்டத்தில் பங்கேற்ற டொமினிக் மார்ட்டின் என்பவர் காவல் துறையில் சரணடைந்தார்.

தானும் "யெகோவாவின் சாட்சிகள்' பிரிவைச் சேர்ந்தவர் என்றும், அந்தப் பிரிவின் போதனைகளைக் கண்டித்து குண்டுவெடிப்புகளை நடத்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

கொச்சியின் புறநகரான தம்மனம் பகுதியில் மார்ட்டின் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset