நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பை அரசுப் பணியாளரை தாக்கிய பாஜக எல்எம்ஏவுக்கு 5 மாதம் சிறை

மும்பை:

மும்பை மாநகராட்சிப் பணியாளர்களைத் தாக்கிய வழக்கில் மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏவும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழ்ச்செல்வன் உள்பட5 பேருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை,  விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2017இல் மத்திய மும்பையின் சியோன் கோலிவாடா, பஞ்சாப் காலனி பகுதியில் சட்டவிரோத மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க சென்ற மும்பை மாநகராட்சி ஊழியர்களை பொது மக்கள் உதவியோடு தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் மற்றும் சிலர் தலைமை வகித்துள்ளனர்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.என்.ரோகாடே அளித்த தீர்ப்பில், கலவரம், தாக்குதல், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் மற்றும் அரசுப் பணியாளரைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ.13,500 அபராதம் விதிக்கப்பட்டது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset