நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து - மரண எண்ணிக்கை 13-ஆக உயர்வு

விஜயநகரம் :

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அடுத்த கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 13 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும், சுமார் 15 பேர் வரை காயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்திலுள்ள ஒரு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது மோதியதாகக் கூறப்படுகின்றது.

இந்தப் பயங்கர விபத்தில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

ரயில்கள் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்து குறித்து முதல் மந்திரி அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயம் அடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset