நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூரில் 175 கலவரம்: பிரதமர் மோடி தப்பிக்க முடியாது - காங்கிரஸ்

புது டெல்லி:

மணிப்பூரில் இனக்கலவரம் தொடங்கி 175 நாள்களாகும் நிலையில், இந்தப் பிரச்னையில் இருந்து முழுவதும் விலகி நின்று பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளதாவது:

மணிப்பூரில் பாஜக எம்எல்ஏக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அவர்களையும் முதல்வரையும் இதுவரை பிரதமர் அழைத்து ஏன் பேசவில்லை?

மணிப்பூரைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அவரது மாநில பிரச்னைக்காக ஏன் பிரதமரை சந்திக்க முடியவில்லை?

அனைத்து விவகாரங்கள் குறித்து பேசும் பிரதமர் மோடியால் மணிப்பூர் பிரச்னை குறித்து சில5 நிமிஷங்களுக்கு மேல் ஏன் பேச முடியவில்லை?

மணிப்பூரின் பல்வேறு சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்ட மாநில முதல்வரை ஏன் இதுவரையில் மாற்றவில்லை? என தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset