நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிங்கப்பூர் சட்ட அமைச்சர் சண்முகத்தை சந்தித்த ஜெயசங்கர்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந் நாட்டு உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை சனிக்கிழமை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

வியட்நாமில் 4 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூருக்கு ஜெய்சங்கர் வந்தார்.

சிங்கப்பூரில் பல்வேறு துறைகள் சார்ந்த அமைச்சர்களுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஜெய்சங்கர், அந் நாட்டு உள்துறை அமைச்சருடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து தனது "எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், "சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்துடனான சந்திப்பு மகிழ்ச்சியளித்தது. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிடையோன உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது' என்று குறிப்பிட்டார்.

"ஜெய்சங்கரின் இந்தப் பயணம் சிங்கப்பூர் - இந்தியா இடையேயான நீண்ட நெருங்கிய உறவை மறு உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது" என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset