செய்திகள் இந்தியா
சிங்கப்பூர் சட்ட அமைச்சர் சண்முகத்தை சந்தித்த ஜெயசங்கர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந் நாட்டு உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை சனிக்கிழமை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வியட்நாமில் 4 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூருக்கு ஜெய்சங்கர் வந்தார்.
சிங்கப்பூரில் பல்வேறு துறைகள் சார்ந்த அமைச்சர்களுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஜெய்சங்கர், அந் நாட்டு உள்துறை அமைச்சருடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து தனது "எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், "சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்துடனான சந்திப்பு மகிழ்ச்சியளித்தது. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிடையோன உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது' என்று குறிப்பிட்டார்.
"ஜெய்சங்கரின் இந்தப் பயணம் சிங்கப்பூர் - இந்தியா இடையேயான நீண்ட நெருங்கிய உறவை மறு உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது" என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am