செய்திகள் இந்தியா
மகனுக்கு போலி பிறப்புச் சான்றிதழ்: அரசியல்வாதி ஆஸம் கான், மனைவி, மகனுக்கு 7 ஆண்டு சிறை
ராம்பூர் :
மகனுக்கு போலி பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆஸம் கான், அவரது மனைவி தஸீன் ஃபாத்திமா, மகன் அப்துல்லா ஆஸம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லக்னௌ, ராம்பூர் ஆகிய இரு இடங்களில் இருந்து போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பெற அப்துல்லா ஆஸமுக்கு அவரது தந்தை ஆஸம் கானும், தாய் தஸீனும் உதவியதாகக் கூறி, ராம்பூர் காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ புகாரளித்தார்.
அவர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்த நீதிபதி, மூவருக்கும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
இதையடுத்து, மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் அருண் பிரகாஷ் சக்úஸனா தெரிவித்தார்.
முன்னதாக, அவதூறு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 2022ஆம் ஆண்டில் தனது எம்எல்ஏ பதவியை ஆஸம்கான் இழந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm