செய்திகள் உலகம்
காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
வாஷிங்டன்:
காசாவை மீண்டும் ஆக்கிரமிக்க நினைப்பது இஸ்ரேலின் மிகப் பெரிய தவறாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக பாலஸ்தீன அதிபரிடம் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடமும் பேசினார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'இரு தலைவர்க களுடனான பேச்சுவார்த்தையின்போது போர் விரிவடைந் துவிடாமல் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பைடன் வலியுறுத்தினார்.
காஸா மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி போன்ற மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சிகள் தொடர்பாக அவர் விவாதித்தார்.
மோதல் விரிவடையாமல் தடுப்பதோடு, மேற்கு கரையில் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த பைடன், பயங்கரவாதக் குழு என்ற அடிப்படையில் ஹமாஸ் அமைப்புக்கு அனைத்து நாடு களும் கண்டனம் தெரிவிப்பது முக்கியமென வலியுறுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பைடன் அளித்தப் பேட்டியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹமாஸை அழிப்பது அவசியம். அதற்காக ஹமாஸ் வசமுள்ள காஸவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm