நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியப் போட்டி கோலாகல தொடக்கம்: தேசியக் கொடியை முகமட் ஷாவும் சிவசங்கரியும் ஏந்தி சென்றனர்

ஹாங்சோவ் :

ஆசிய போட்டியின் தொடக்க விழாவில் தேசியக் கொடியை முகமட் ஷாவும் சிவசங்கரியும் ஏந்தி சென்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. 

சீனாவின் ஹாங்சோவ் நகரில் உள ஒலிம்பிக்  அரங்கத்தில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 


தொடங்கிய விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தி வந்தனர்.

இதில் மலேசிய அணிக்கு சைக்கிளோட்ட வீரர் முகமட் ஷா பிர்டாவ்ஸும் ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி ஆகியோர் தலைமையேற்று தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.

அவர்களை பின் தொடர்ந்து மலேசிய விளையாட்டாளர்கள் சென்றனர்.

அதே வேளையில் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி  இந்திய கொடியை ஏந்தி சென்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset