செய்திகள் மலேசியா
மஇகாவின் முயற்சியை ஆதரிக்கிறோம், ஆனால் இணைய மாட்டோம்: கிம்மா
கோலாலம்பூர் :
இந்திய கட்சிகளை ஒன்றிணைக்கும் மஇகாவின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
ஆனால் மஇகாவுடம் கிம்மா இணைய முடியாது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் கூறினார்.
மஇகாவும் மலேசியா மக்கள் சக்தி கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளன.
இரு கட்சிகளை இணைக்கும் செயலகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயலகத்தில் இணைந்து செயல்பட மற்ற இந்திய கட்சிகளுக்கும் மஇகா அழைப்பு விடுத்துள்ளது.
மஇகாவின் அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.
ஆனால் மஇகாவுடன் கிம்மா இணைய முடியாது. காரணம் கிம்மா, அம்னோவின் இணைக் கட்சியாக உள்ளது.
அம்னோவில் இருந்து கிம்மா வெளியேற விரும்பவில்லை.
ஆனால் இந்திய சமுதாயத்தின் நலனுக்கான முயற்சிகளுக்கு கிம்மா என்றுமே துணை நிற்கும் என்று டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am